சூர்யா ஜோதிகா விவாகரத்து உண்மையா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்..
நடிகை ஜோதிகா, 90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயின். இவர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் 36 வயதிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். கடந்த ஆண்டு 2023 -ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த காதல் தீ கோர் என்ற படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. தற்போது ஜோதிகா ஹிந்தி படங்களில் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது.
சமீபகாலமாக சூர்யா - ஜோதிகா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் விவகாரத்து செய்யபோகிறார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் உலா வந்தது. இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு பேட்டியொன்றில் சூர்யா - ஜோதிகா விவாகரத்து பற்றி பேசியுள்ளார்.
அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. அதனால் தான் ஜோதிகா மும்பைக்கு போய்ட்டாங்க, சண்டைன்னு பேசுவது எல்லாம் உண்மை கிடையாது பொய். மும்பைக்கு போனதே அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, கடைசி காலத்தில் பெற்றோரிடம் இருக்க வேண்டும் என்ற ஆசை என்றும் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்.
சூர்யாவும் குடும்பம் அங்கே இருக்கும் போது அவரும் போய் விட்டு வருகிறார். விமானத்தில் சென்று வருவதெல்லாம் சாதாரணம், எதையாவது ஊதி விடவேண்டும் என்று இதையெல்லாம் செய்கிறார்கள் என்று சூர்யா - ஜோதிகா விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜோதிகா மும்பையில் செட்டிலாகியது குறித்து சில விசயங்களையும் பகிர்ந்திருக்கிறார். அதாவது "மகன் மற்றும் மகள் இருவருமே மும்பையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்களின் உயர்கல்வியில் அடியெடுத்து வைத்துள்ளனர்.
அந்த நேரத்தில் அவர்களுடன் இருக்க வேண்டும். மேலும் ஹிந்தியில் பல படங்களில் நடித்து வருகிறேன்". இந்த காரணத்தால் தான் மும்பையில் செட்டில் ஆனோம். இந்த வேலைகளை முடித்த பின் சென்னை திரும்பி விடுவோம் என்றும் கூறியிருந்தார்.
மேலும் சமீபத்தில் அவர்களது மகள் தியா பள்ளி விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் இருந்தனர். தற்போது சூர்யா - ஜோதிகா ஜோடியாக வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்று சில புகைப்படங்களை வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.