சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகளா இது!! 27 வயதாகி என்ன வேலை செய்றாங்க தெரியுமா..
தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா. அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததை அடுத்து பில்லு கேமர், நிர்மலா கான்வெண்ட் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் வாய்ப்பில்லாமல் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றியும் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஸ்ரேயா சர்மா, தற்போது கிளாமர் ஆடையணிந்து ஓட்டல் ஒன்றில் ஒயினை கையில் வைத்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை ஸ்ரேயா சர்மா.
நம்ம ஐஸுவா இது என்று புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.



