சூர்யாவை ஏற்றிவிட்ட ஏணி.. திடீர் மரணத்தால் உடைந்துபோன குடும்பம்.. நேரில் சென்ற சூர்யா, சிவகுமார்

Sivakumar Suriya
By Kathick Feb 12, 2024 06:30 AM GMT
Report

இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் கடந்த 2021ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். 1994ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளராக சினிமாவில் களமிறங்கிய கே.வி. ஆனந்த், 2005ஆம் ஆண்டு வெளிவந்த கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

சூர்யாவை ஏற்றிவிட்ட ஏணி.. திடீர் மரணத்தால் உடைந்துபோன குடும்பம்.. நேரில் சென்ற சூர்யா, சிவகுமார் | Suriya Sivakumar Visit Kv Anand Family

இதன்பின் அயன், கோ, மாற்றான், அனேகன், கவண் என வித்தியாச வித்தியாசமான கதைக்களங்களை வைத்து படம் இயக்கி வந்தார். கடைசியாக காப்பான் படத்தை இயக்கினார். இதில் மூன்று முறை நடிகர் சூர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவை ஏற்றிவிட்ட ஏணி.. திடீர் மரணத்தால் உடைந்துபோன குடும்பம்.. நேரில் சென்ற சூர்யா, சிவகுமார் | Suriya Sivakumar Visit Kv Anand Family

குறிப்பாக சூர்யாவின் திரை வாழ்க்கையில் டாப் 10 படங்கள் என லிஸ்ட் எடுத்தால், அதில் கண்டிப்பாக அயன் இடம்பெறும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு சூர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கிய நபராக இருந்துள்ளார் கே.வி. ஆனந்த்.

சூர்யாவை ஏற்றிவிட்ட ஏணி.. திடீர் மரணத்தால் உடைந்துபோன குடும்பம்.. நேரில் சென்ற சூர்யா, சிவகுமார் | Suriya Sivakumar Visit Kv Anand Family

இந்நிலையில், சமீபத்தில் தனது தந்தை சிவகுமாருடன் இணைந்து கே.வி. ஆனந்த் குடும்பத்தை சந்தித்துள்ளார் நடிகர் சூர்யா. அப்போது கே.வி. ஆனந்த் குடும்பத்தினர்களுடன் சூர்யா, சிவகுமார் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

Gallery