விட்டுக்கொடுத்த சூர்யா!! ஒரேவொரு படத்தால் மாறிய அஜித்தின் தலையெழுத்து..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார், தற்போது விடாமுயற்சி படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். ஸ்மார்ட் லுக்கில் காணப்படும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. நடிகர் அஜித் ஆரம்பத்தில் இருந்து பல தோல்விகளை சந்தித்து சரியான வாய்ப்பிற்காக காத்துக்கொண்டிருந்த சமயம்.
பல தோல்விகளுக்கு பின் விரக்தியில் சினிமாவை விட்டே விலக முடிவு செய்திருக்கிறார் அஜித். அப்போது தான் அஜித்தை தலையெழுத்தை மாற்றும் அளவிற்கு வந்தது ஆசை படம். இயக்குனர் வசந்த் இயக்கத்தில் அஜித், சுவலட்சுமி நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ஆனால் இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அஜித் இல்லையாம், நடிகர் சூர்யா தானாம். ஒரு பேட்டியொன்றில் நடிகர் அஜித், ஆசை படத்தில் முதலில் தான் நடிக்கவில்லை என்றும் சூர்யா தான் முதலில் நடிக்கவிருந்ததாக கூறியிருக்கிறார். இயக்குனர் வசந்த் சூர்யாவை அந்த ரோலில் நடிக்க வைக்க அணுகி இருக்கிறார்.
அப்போது சூர்யா படிப்பை முடித்துவிட்டு கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வந்ததால் நடிக்க மறுத்துவிட்டார். சூர்யா நடிக்க முடியாது என்று கூறியதும் அமராவதி படத்தை பார்த்த வசந்த் தனது படத்திற்கு தான் பொறுத்தமாக இருப்பேன் என்று என்னிடம் கேட்டார்.
அதனைதொடர்ந்து ஆசை படம் உருவாகி மிகப்பெரிய படமாக பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்படத்தினை தொடர்ந்து சூர்யா நடிக்க வந்தப்பின் நேருக்கு நேர் படத்தை வசந்த் இயக்கியிருக்கிறார்.