எங்களுக்கு இடையே உறவு ஏற்பட அது தான் காரணம்!! நடிகை டாப்ஸி வெளிப்படை..
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை டாப்ஸி. முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.
இதையடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சன 3 போன்ற படங்களில் நடித்து இருந்தார். கடைசியாக தமிழில் அனபெல் சேதுபதி திரைப்படத்தில் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பெரும் தோல்வியை தழுவியது.
இதற்கிடையே டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த முன்னாள் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போ என்பவரை காதலித்துவந்தார்.
இந்நிலையில் நடிகை டாப்ஸி, மத்யாஸ் மீது எப்படி காதல் ஏற்பட்டது என்பது தொடர்பாக பேசியுள்ளார். அதில், எங்களுக்குள் ஏற்பட்ட காதல் பார்த்ததும் தோன்றிய காதல் இல்லை. நாங்கள் தொடர்ந்து சந்தித்து கொண்டு இருந்தேன். பிறகு அவரை நேசிக்க தொடங்கினேன். இது ஒரு மாதத்திலோ அல்லது உடனடியாகவோ நடக்கவில்லை என்று டாப்ஸி கூறியுள்ளார்.