ஆசை ஆசையாய் வாங்கிய 3 வீடு!! கோடிக்கணக்கில் அடமானம் வைத்த நடிகை தமன்னா..
தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வருபவர் நடிகை தமன்னா. சமீபகாலமாக உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த தமன்னா, கடைசியாக அவர் நடிப்பில் அரணமனை 4 படம் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை பெற்றுள்ளது.
நடிகர் விஜய் வர்மாவை காதலித்து டேட்டிங் செய்து வரும் தமன்னா, இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மும்பை அந்தேரி வீர தேசாய் சாலையில் இருக்கும் 3 அப்பார்ட்மெண்டுகளை தமன்னா இந்தியன் வங்கியில் 7.84 கோடிக்கு அடமானம் வைத்திருக்கிறார்.
ஜூன் 14 ஆம் தேதி வீடுகளை அடமானம் வைத்து 4.7 லட்சம் ஸ்டாம்ப் டியூட்டி கட்டியிருக்கிறார். அதேபோல், ஜூன் 27 ஆம் தேதி மும்பை ஜுஹு பகுதியில் வணிக வளாகம் ஒன்றை நானாவதி கன்ஸ்ட்ரக்ஷனிடம் 5 ஆண்டுகளுக்கு லீசுக்கு எடுத்திருக்கிறார். மாத வாடகை 15லட்சம். அந்த வாடகை 4 ஆண்டில் 20.16 லட்சமாகவும் ஐந்தாவது ஆண்டில் 20.96 லட்சமாக உயருமாம்.
அதற்காக 72 லட்சம் செக்யூரிட்டி டெபாசிட்டாக கொடுத்துள்ளார் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து நகை வியாபாரம் உள்ளிட்ட பல தொழில்களில் பிசினஸ் செய்து சம்பாதித்த் வருகிறார் தமன்னா. இப்போது எதற்கு இத்தனை கோடிகளில் பிசினஸ் செய்கிறார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.