விஜய்யை போல் மாநாடு படத்தால் புலம்பும் நடிகர்! இது கதையே வேறயாம்..
நீண்டவருடங்களுக்கு பிறகு பெரிய வெற்றியை கொடுத்தவர் என்ற பெயரை எடுத்து வருபவர் நடிகர் சிம்பு. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வரும் மாநாடு படத்திற்கு பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
இப்படத்தின் பல பிரச்சனைகளுக்கு பிறகு பலர் விலகியது குறித்தும் செய்திகள் வெளியானது. ஏற்கனவே இப்படத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருந்து பின் சிம்புவிடன் கதை கூறினேன் என்ற செய்தி வைரலானது. தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் எஸ் ஜே சூர்யாவிற்கு முன் பலர் நடிகர்கள் பேசியிருந்தார்களாம்.
ஆனால் அவரின் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி முதலில் கமிட்டாகினாராம். பின் இடையில் பிரச்சனை வர படம் கைவிடப்பட்டது என செய்திகள் வந்ததால் அரவிந்த் சாமி மற்ற படங்களில் கமிட்டாகுவதில் ஆர்வம் கொண்டார்.
பின் வெங்கட் பிரபு ப்லார் வில்லன்களை சந்தித்தும் செட்டாகாததால் எஸ் ஜே சூர்யாவை கமிட் செய்து நடிக்க வைத்துள்ளாராம்.