அப்படி ஒரு உருட்டு இப்படி ஒரு உருட்டா! மோடிஜிக்கு தெரியாதா?
டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில் அந்தந்த மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். அவ்விழாவில் இந்த ஆண்டு பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அணுமதி வழங்கியுள்ளனர் மத்திய அரசு.
ஆனால் கர்நாடக ஊர்தியை தவிர தென்மாநிலங்களின் ஊர்திகள் புறக்கணிப்பு. தமிழகம், கேரளா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களின் ஊர்தியை நிராகரித்துள்ளது.
அதிலும் கப்பலோடிய தமிழன் வ.உ.சி மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச அதிகாரிகளுக்கு தெரியாது என கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
அப்படி என்றால் ஜனவரி 3ஆம் தேதி, வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடிஜி அவர்கள் அவரின் டிவிட்டர் பக்கத்தில் வணங்கி போட்ட பதிவு பொய்யா என பலர் விமர்சித்து வருகிறார்கள்.
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்.
— Narendra Modi (@narendramodi) January 3, 2022
குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது. (1/2)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 17, 2022