கீர்த்தி சுரேஷும், திரிஷாவும் தான் தெரியும்!! விஜய்யை கண்டபடி பேசிய பிரபலம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கோட் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு தற்போது படத்தின் டெக்னிக்கல் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் விஜய் அதை முடித்துவிட்டு அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதற்கிடையில் அரசியல் விஷயங்களிலும் கவனம் செலுத்தி வரும் விஜய்யை பலர் விமர்சித்தபடி பேசி வருகிறார்கள். அந்தவகையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், விஜய் பற்றிய ஒரு விஷயத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதில், விஜய்க்கு தமிழும் தெரியாது தேசியம் என்றால் தெரியாது, எதுவுமே தெரியாது. அவருக்கு தெரிந்தது எல்லாமே திரிஷா, கீர்த்தி சுரேஷ் தான். கொள்கை ரீதியாகவும் அம்பேத்கர், பெரியார், காமராஜர் பத்தி எதுவும் தெரியாது.
விஜய் ரசிகர்களும் அப்படி தான் இருக்கிறார்கள். விஜய் இன்னும் அரசியல்மயப்படுத்தவில்லை. அப்படி செய்தால் யாரும் அவர் பின்னாடி வரமாட்டார்கள் என்று தமிழா தமிழா பாண்டியன் விமர்சித்து பேசியிருக்கிறார். இவர் பேசியதை விஜய் ரசிகர்கள் கடுமையாக திட்டி வருகிறார்கள்.