வாடகை தாய் மூலம் குழந்தை.. நயன்தாரா பற்றிய ரகசியத்தை உடைத்த பிரபலம்
நயன்தாரா
'ஐயா' என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.
குறிப்பாக கிளாமர் ரோல்களை எந்தவித தயக்கமுமின்றி நடித்ததன் காரணமாக அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. தற்போது, மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரபல வழக்கறிஞர் தமிழ் வேந்தன் நடிகை நயன்தாரா குறித்து யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ் வேந்தன் பேட்டி
அதில், " நடிகை ஸ்ரீதேவியைவிட தமிழ் சினிமாவில் அதிக வருடங்கள் நிலைத்திருப்பது நடிகை நயன்தாரா தான். அதற்கு முக்கிய காரணம் வயதாகினாலும் இன்றும் இளமை மாறாமல் இருக்கும் அவர் அழகு தான்.
அதில் நயன்தாரா எப்போதுமே செம தெளிவு. அதிக உணவோ, மதுவோ, புகையோ எடுத்துக்கொண்டால் அவருக்கு அழகு போய்விடும் என்ற காரணத்தினால் அதை தவிர்த்து கொண்டார்.
முக்கியமாக குழந்தை பெற்றுக்கொண்டால் அந்தக் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டும். அதனால் உடலில் மாற்றங்கள் வர கூடும் என்ற காரணத்தினால் அவர் வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக்கொண்டார்” என கூறியுள்ளார்.
குறிப்பு: இதற்கும் விடுப்பு தளத்திற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை, அவர் சொன்ன தகவலை பகிர்ந்து மட்டுமே உள்ளோம்.