விஜய் போய்ட்டா தமிழ் சினிமா இல்லையா!! பளீச் பதிலளித்த திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர்..
தளபதி69
நடிகர் விஜய் தன்னுடைய தளபதி69வது படத்திற்கு பின் அரசியலில் முழு பங்கு கொடுப்பதால் சினிமாவில் இருந்து விலகுவேன் என்று முடிவெடுத்தார்.
இதனால் தமிழ் சினிமா படுத்துவிடும் என விஜய் ரசிகர்களும் ஒருசிலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.
விஜய் இல்லாமல் பாதிப்பு ஏற்படுமா
சமீபத்தில் புதிய திரையரங்கு திறப்பு விழாவில் கலந்து கொண்டு வேட்டையன் படம் ஜெயிலர் பட வசூலைவிட அதிகம் வசூல் செய்யும் என்று கூறியிருக்கிறார். மேலும், விஜய்யின் கோட் படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் வேட்டையை நடத்தி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து சினிமாவில் இருந்து அரசியலுக்கு நுழைவதால் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு, அப்படி எல்லாம் எந்தவொரு பாதிப்பும் வராது. எம்ஜிஆர், சிவாஜிக்கு பின் யார் வருவாய்? என எதிர்ப்பார்த்தபோது ரஜினிகாந்த் கமல் ஹாசன் வந்தனர்.
பின் விஜய், அஜித் வந்தனர். அப்படி இவர்களுக்கு பின் அடுத்தடுத்த நடிகர்கள் ரசிகர்களை கவர்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இப்போது பான் இந்தியா படங்கள் விஜய் படங்களைவிட அதிகளவில் தியேட்டரில் வசூலை குவித்து வருவதாகவும் மொழி கடந்து நடிகர்கள் மற்ற மாநில ரசிகர்களையும் கவர்ந்து வரும் நிலையில் சினிமா மற்றும் தியேட்டர் தொழில் எந்த வகையிலும் பாதிப்பை சந்திக்காது என்று திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.