இயக்குனருடன் ஒரே ரொமான்ஸ்!! வாரிசு நடிகை தன் காதலரை பிரிய இதுதான் காரணமாம்..
தென்னிந்திய சினிமாவில் வாரிசு நடிகை ஒருவர் தன் காதலரை பிரிந்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு காரணமே பிரபல இயக்குனருடன் ரொமான்ஸ் செய்தது தான் என்றும் இணையத்தில் பேசு பொருளாகவும் மாறியிருக்கிறார்.
நாயகன் நடிகரின் மகளாக சினிமாவில் அறிமுகமாகி டாப் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு முன்னணி இடத்தினை பிடித்தவர் தான் அந்த நடிகை. ஆரம்பத்தில் ஜாக்லேட் பாய் நடிகருடன் காதலில் இருந்து அதன்பின் பிரிந்த அந்த நடிகை, வெளிநாட்டு நபருடன் காதலில் இருந்து திருமணம் வரை சென்றார்.
அவரும் செட்டாகவில்லை என்று பிரேக்கம் செய்த அந்த நடிகை, சில ஆண்டுகளில் வேறொரு ஓவியக்கலைஞருடன் காதலில் விழுந்தார். லிவ்விங் வாழ்க்கையை பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அந்த நடிகை தற்போது அவரையும் விட்டு பிரிந்திருக்கிறார். எப்போது திருமணம் என்று சில மாதங்களுக்கு முன் தான் அந்த நடிகையிடம் பலரும் கேள்விகளை கேட்டு வந்தனர்.
ஆனால் நடிகை இப்போது பிரேக்கப் செய்வதற்கு என்ன காரணம் என்று முனுமுனுத்து வருகிறார். ஆனால், அந்த நடிகை பிரபல இயக்குனருடன் அப்பா எழுதிய ஒரு ஆல்பம் பாடலில் ஓவர் ரொமான்ஸ் செய்தது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.