விஜய்யை தொடர்ந்து நடிகை திரிஷா எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு.. ரசிகர்கள் ஷாக்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு, விஸ்வம்பரா, ராம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன.
இந்த நிலையில், நடிகை திரிஷா சினிமாவிலிருந்து விலகப்போவதாக தகவல் ஒன்று கடந்த சில மாதங்களாக உலா வருகிறது.

காரணம், கருப்பு, விஸ்வம்பரா, ராம் ஆகிய படங்களுக்கு பின் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் திரிஷா கமிட் ஆகவில்லை. இதனால் அவர் விலகப்போகிறார் என பேசப்பட்டது.
இந்நிலையில், திரிஷா சினிமாவிலிருந்து விலகுவது உண்மையா இல்லையா என்பது குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன் தனது Youtube சேனலில் பேசியுள்ளார். இதில், "சினிமாவை விட்டு திரிஷா விலகுவது உண்மைதான்" என அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய் சினிமாவிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் தற்போது திரிஷாவும் விலகப்போவதாக வந்துள்ள செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.