விஜய் அந்த விசயத்தில் போரிங் தான்!! எப்பவும் அதை தான் செய்வார்!! ரகசியத்தை கூறிய நடிகை திரிஷா.
தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது. இதற்கிடையில் தமிழக வெற்றிக்கழகம் சார்ப்பான வேலைகளில் ஈடுபட்டும் கோட் படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடக்கும் போது கேரள ரசிகர்களையும் சந்தித்து வருகிறார்.
அங்கு அவர் ரசிகர்களோடு எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேசமயம் விஜய் பற்றிய சில கிசுகிசு வதந்திகளும் இணையத்தில் கசிந்து வருகிறது. அப்படி நடிகை திரிஷாவை வைத்து பல செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய், திரிஷா காஃபி வித் அனு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், அதில், ஜோதிகா, திரிஷா, அசினுடன் ஜோடியாக நடித்தால் எந்த ஜோடி நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு, நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள் விஜய் - திரிஷா ஜோடிதான் நல்லா இருக்கு, பக்கத்தில் இருக்கிறார்களே வேறென்ன சொல்றது என்று கூறியிருக்கிறார். மேலும், திரிஷா ஷூட்டிங்கில் எப்படி என்ற கேள்விக்கு இவங்களால் நிறைய பேர் தூங்கி தான் பார்த்திருக்கிறேன், டார்ச்சர் செய்வார் என்று விஜய் கூறியிருக்கிறார்.
மேலும் விஜய் எப்படி என்று அனு, திரிஷாவிடம் கேட்க, சொல்லலாமா என்று பர்மிஷன் கேட்டிருக்கிறார். போரிங், very Moody, சில சமயம் ஜாலியாக இருப்பார், அதிக நேரம் அமைதியாகவே இருப்பார். யார்கிட்டயுமே அதிகமாக பேசமாட்டார். ஷூட்டிங் முடிந்ததும் ஒரு சேர் போட்டு செவுக்கு முன்னாடி உட்கார்ந்து ஒரு மணிநேரம் பார்த்துக்கிட்டே இருப்பார்.
அதற்கு விஜய், வேலைங்க, அதைபத்தி யோசிப்பேன் என்று இருக்கிறார். அதெல்லாம் இல்லை, சில சமயம் கண்ணை மூடிக்கிட்டு இருப்பார் என்று திரிஷா கூறியிருக்கிறார். நான் உங்களுக்கு போரிங்-ஆ என்று விஜய் திரிஷாவை பார்த்து கேட்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து விஜய் தன் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் திரிஷா கூறியிருக்கிறார். அதற்கு நான் அப்படியெல்லாம் கிடையாது என்று பதிலளித்திருக்கிறார் நடிகர் விஜய்.