மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்!! திரிஷா சொன்ன காரணத்தை பாருங்க
சமீபத்தில் திரிஷாவை சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார் மன்சூர் அலிகான். இவரது பேச்சுக்கு பல திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தார்கள்.
மேலும் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
தற்போது மன்சூர் அலிகான் சர்ச்சை வகையில் பேசிய விவகாரம் குறித்து திரிஷா தரப்பிடம் ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் நடிகை திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியது.
இந்நிலையில் திரிஷா காவல்துறையின் கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று திரிஷா கூறியுள்ளார்.