கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிடம் வாங்கி கட்டிக்கொண்ட தி லெஜண்ட் பட நாயகி !
ஊர்வசி ரவுடேலா
பிரபல நடிகை மாடல் நடிகையாக வலம் வருபவர் ஊர்வசி ரவுடேலா, இவர் சமீபத்தில் வெளியான தி லெஜண்ட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் அளித்திருந்த சமீபத்திய நேர்காணலில் தனது வாழ்வில் நடந்த விஷயங்கள் குறித்து பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதன்படி தனக்கு நிறைய பேர் காதல் புரோபோஸ்கள் செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
அதன்படி பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் குறித்த சர்ச்சையான விஷயத்தை பேசியிருக்கிறார். ரிஷப் பண்ட் தனக்காக நீண்ட நேரம் ஹோட்டலில் காத்திருந்தார் என பேசியிருக்கிறார்.
மேலும் ரிஷப் பண்ட்-ன் பெயரை குறிப்பிடாமல் RP என குறிப்பிட்டுள்ளார் ஊர்வசி. இந்நிலையில் இதற்கு பதிலடியாக ரிஷப் பண்ட் இன்ஸ்டா பக்கத்தில் “பிரபலமாக வேண்டும், நாம் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறு நேர்காணலில் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. பெயருக்காகவும் பிரபலமாவதற்காகவும் இப்படியெல்லாம் நடந்துகொள்வது வருத்தமாக உள்ளது. கடவுள் தான் இவர்களைக் காப்பற்ற வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.