முத்தக்காட்சி, கிளாமர் ரோல் பண்ணும் போது!! நடிகை ஊர்வசியிடம் கமல் சொன்ன அந்த வார்த்தை..
80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஊர்வசி. இவரின் சகோதரிகளான கல்பனா, கலாரஞ்சனி சினிமாவில் நடிகைகளாக உலா வந்தனர். தற்போது நடிகை ஊர்வதி குணசித்திர ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய மகள் தேஜலட்சுமி ஜெயன் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக் பல பேட்டிகளில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் நான் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரவில்லை, தமிழில் இருந்து தான் மலையாள சினிமாவிற்கு சென்றேன். ஊர்வசி என்று தமிழில் பெயர் வைத்து அந்த பெயர் கூப்பிட்டு தான் நான் மலையாளத்திற்கு சென்றேன் என்று உண்மையை முதன்முதலில் கூறியிருக்கிறார். அப்போது என் உடம்பை பார்த்து தமிழில், இந்தியில் தான் வாய்ப்பு கேட்டார்கள்.
பாலிவுட் நடிகைகள் போல் நான் இருந்தேன், தென்னிந்திய நடிகையை போல் இல்லை என்று கூறி வாய்ப்புகள் வந்தது. ஆனால் எனக்கு நல்ல கேரக்டர்கள் பண்ண வேண்டும், கிளாமர் ரோல் வேண்டாம் என்று இருந்து வந்தேன். அதனால் தான் தெலுங்கு சினிமாவை நான் ஒதுக்கி வந்தேன்.
கமல் சார் என்னிடம், ஊர்வசி நீங்க நல்ல கேரக்டர் பண்ண ஆசைப்படுகிறீர்கள், லவ் சீன், கிளாமர் சீன் பண்ண கூச்சமாக இருக்கிறது. கொஞ்சம் மலையாளத்தில் கவனம் செலுத்துங்கள், நல்ல வாய்ப்பு வந்தால் விடாதீர்கள் என்று அட்வைஸ் செய்தார், எனக்கு வாழ்க்கை கொடுத்ததே தமிழ் சினிமா தான் என்று ஊர்வசி கூறியிருக்கிறார்.