பிரிந்து சென்ற காதல் மனைவி!! ஃபீல் பண்ணி டி ராஜேந்தர் செய்த சம்பவம்..

T Rajendar Tamil Actress Cinema News
By Edward Feb 12, 2026 03:30 AM GMT
Report

டி ராஜேந்தர்

தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் டி ராஜேந்தர். அவரின் உயிருள்ளவரை உஷா படம் பிப்ரவரி 13 ஆம் தேதி ரீரிலிஸாகவுள்ளது.

பிரிந்து சென்ற காதல் மனைவி!! ஃபீல் பண்ணி டி ராஜேந்தர் செய்த சம்பவம்.. | Uyirullavarai Usha Movie For His Wife T Rajendar

சரிதா, நளினி, ராதா ரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி, கவுண்டமணி என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் மிகப்பெரிய ஹிட்டிற்கு காரணம் பாடல்கள் தான். அப்படத்தின் ஒரு பாடலை, டி ராஜேந்தர் தன் மனைவியை பிரிந்த வேதனையோடு எழுதியிருக்கிறார்.

பிரிந்து சென்ற காதல் மனைவி

அப்படம் உருவான சமயத்தில்தான் டி ராஜேந்தருக்கு கல்யாணமாகியிருந்தது. திருமணமான புதிதில் அவருடைய மனைவி உஷா, அவரை பிரிந்து சில நாட்கள் அமெரிக்கா சென்றிருந்தாராம்.

பிரிந்து சென்ற காதல் மனைவி!! ஃபீல் பண்ணி டி ராஜேந்தர் செய்த சம்பவம்.. | Uyirullavarai Usha Movie For His Wife T Rajendar

அவர் பிரிந்து சென்ற சோகத்தில் டி ராஜேந்தர், சில வரிகளை எழுதியிருக்கிறார். கங்கை கரை காத்தே நொல்லு மங்கை தனை பார்த்தால் சொல்லு என்று எழுதி இருக்கிறார். அதேபோல் அப்பாடலை கே ஜே யேசுதாஸிடம் கூறி பாட வைத்திருக்கிறார். இந்த உணர்வுப்பூர்வமான சம்பவத்தை டி ராஜேந்தர் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.