வடிவேலுவுக்கு மூன்று கண்டிஷன் போட்ட லைக்கா! அதெல்லாம் முடியாது என இதை கையில் எடுத்த வைகைபுயல்..

shankar vadivelu lyca vaigaipuyal naaisekar
By Edward Sep 07, 2021 04:00 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருந்தவர் நடிகர் வடிவேலு. 4 ஆண்டுகளாக நடிக்க தடை செய்து ரெட் கார்டு கொடுத்தனர். அதற்கு காரணமாக இருந்தது இம்சை அரசன் படத்தின் சங்கருக்கு ஏற்பட்ட கோடிக்கணக்கு நஷ்டம் தான். தற்போது அதையெல்லாம் சுமுகமான சமாதனப்படுத்திய பின் ரெட் கார்ட் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், லைக்கா நிறுவனத்தின் 5 படங்களில் கமிட்டாகி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் சுபாஷ் கரணை பார்க்க சென்ற வடிவேலுவிடம் 3 கண்டிஷன்களை போட்டுள்ளது லைக்கா நிறுவனம். இந்த விஷயத்திர்கு ஓகே என்றால் படம் பண்ணலாம் இல்லை என்றால் விட்டுவிடலாம் என்றும் கூறியுள்ளனர்.

1. இம்சை அரசனுக்கு கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.

2. அப்படி இல்லை என்றால் அந்த படத்தினை முடித்து கொடுக்க வேண்டும்.

3. அதுவும் முடியாது என்றால் வாங்கின படத்திற்காக இரு படங்களை நடித்து கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

கடைசியில் இரு படங்களை நடித்து கொடுக்க முடிவு எடுத்துள்ளாராம் வைகைபுயல் வடிவேலு. மேலும் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்கவும் கமிட்டாகினார் வடிவேலு. பட அறிவுப்பி வெளியிட்ட அடுத்த நாளே சதிஷ் நடித்து வரும் படத்தின் நாய் சேகர் என்ற டைட்டில் பெயரை ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்து விட்டதாக சில பிரச்சனை எழுந்துள்ளது.

எங்களால் அந்த டைட்டிலை தரமுடியாது என்று நடிகர் சதீஷ் படக்குழு தெரிவித்து விட்டதாகவும் முழு கதை டைட்டிலை மையமாகவும் பல இடங்களில் அதன் பெயர் கூறப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் டைட்டில் வேறொன்றை வைத்துக்கொள்ளலாம் என்று இயக்குநர் சுராஜ் கூறியுள்ளாராம்.