பெண்கள் விஷயத்தில் மோசம், உதவி செய்ய மனமில்லாதவர்!! மௌனம் களைத்த வடிவேலு..
நடிகர் வடிவேலு பற்றி பல விமர்சனங்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது. அதாவது, ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு பெண்களிடம் தவறாக நடந்துகொள்வார், பெண்கள் விஷயத்தில் ரொம்ப மோசம் என்று இணையத்தில் தகவல் வெளிவந்துகொண்டு இருந்தது.
அதுமட்டுமின்றி வடிவேலுடன் நடித்த சக நடிகர்களே "உதவி செய்ய மனமில்லாதவர்" என்று அவரை பேட்டியில் திட்டித்தீர்த்துள்ளனர்.
இந்நிலையில் வடிவேலு தன் மீது வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். அதில் அவர், திரைத்துறையில் நல்லதை விட கெட்டது தான் அதிகம் உள்ளது. கால் வைக்கிற இடம் எல்லாம் கண்ணி வெடியா இருக்குன்னு ஒரு வசனம் பேசி இருப்பேன். அதே போல தான் என்னுடைய வாழ்க்கையும். எது செய்தாலும் எனக்கு இப்படித்தான் பெயர் வருகிறது.
இது பற்றி கமல் ஹாசனிடம் கேட்டேன், அதற்கு அவர், இந்த மாதிரிலாம் நிறைய வருவார்கள். நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று சொன்னார். நான் ரீ என்ட்ரி கொடுத்தவுடன் என்னை விமர்சனம் செய்தவர்கள் காணவில்லை. தொழிலை உயிராக நேசித்தால் எங்கும் எப்போதும் தோற்கமாட்டோம். கீழே விழமாட்டோம் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.