கதை தெரியாமலே விஜய் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்!! கடுப்பாகும் வெங்கட் பிரபு..

Vaibhav Vijay Venkat Prabhu Greatest of All Time
By Edward Feb 19, 2024 03:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் புரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் ரசிகர்கள் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அப்படத்தின் அப்டேட்களை கோட் படத்தில் நடித்துள்ள நடிகர்களிடன் ரசிகர்களும் பத்திரிக்கையாளர்களும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

கதை தெரியாமலே விஜய் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்!! கடுப்பாகும் வெங்கட் பிரபு.. | Vaibhav Funny Reply Aboyt Vijay Goat Venkarprabhu

சமீபத்தில் கோட் படத்தில் நடித்து வரும் நடிகர் வைபவ், அவர் நடித்த ரணம் படத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். ஒரு பத்திரிக்கையாளர் தளபதி படத்தில் உங்கள் ரோல் என்ற கேள்வியை கேட்டுள்ளார். சரியான கேள்வி கேட்டீர்கள், ஒரு சீனில் விஜய் சார் என்னை தெரியும்ல(விஜய்யின் வேடம் பற்றி) என்று இயக்குனரிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு வெங்கட் பிரபு அந்த சீனில் பார்த்த பிறகு அவனை ஒரு மாதிரி தான் உங்களுக்கு தெரியும் என்றார். வெங்கட் பிரபு கதை பற்றி விஜய் சாரிடம் சொல்லும் போது நான் பிளாங்க்-ஆக முழித்தேன். உடனே என்னை விஜய் சார் பார்த்து, என்னடா பார்க்குற என்றதும் உங்களுக்கு கதை எல்லாம் தெரியும் என்ன வேணாலும் டவுட் கேட்கலாம், எனக்கு கதையே தெரியாது, நான் என்ன கேட்கிறது என்றேன்.

ராதிகாவையும் விட்டுவைக்காத பாலய்யா!! நீங்களாம் மனுஷங்களாடா திட்டி தீர்த்த பிரபல நடிகை.. வெளுத்து வாங்கிய பிரபலம்

ராதிகாவையும் விட்டுவைக்காத பாலய்யா!! நீங்களாம் மனுஷங்களாடா திட்டி தீர்த்த பிரபல நடிகை.. வெளுத்து வாங்கிய பிரபலம்

இவ்வளவு நாள் ஷூட் பண்ணியும் கதை தெரியலன்னா எப்படிடா என்று கேட்டதும் வெங்கட் பிரபு சும்மா இருடா என்று என்னை கேட்டார். அதன்பின் விஜய்யைவிட கதாநாயகியுடன் நிறைய சீன் உங்களுக்கு தானாம் என்ற கேள்விக்கு அப்படியெல்லாம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும், கதை எல்லாம் கேட்காமல் தான் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, அப்படியெல்லாம் இல்லை. சரோஜா படம் முதல் வெங்கட் பிரபு கதை சொன்னதே இல்லை. கதை கேட்டால், எனக்கே தெரியலடா என்று தான் சொல்லுவார். இப்போது பெரிய படம் என்பதால், ஓ உனக்கு கதையெல்லாம் தெரியுமா என்று வெங்கட் பிரபு கலாய்ப்பார்.