டாப் நடிகர்கள் என்னை ஒதுக்க இதான் காரணம்.. மனவலியை பகிர்ந்த நடிகை வாணி போஜன்..
அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வாணி போஜன். தற்போது லவ் படத்தினை தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆர்யன் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வாணி போஜன் இடம் தொகுப்பாளர், படத்தில் தேவை இல்லாமல் படுக்கையறை காட்சி வைக்கிறார்களா? அல்லது படத்தின் கதைக்காக வைக்கிறார்களா என்று கேள்வி கேட்டு அந்த காட்சியை தடுத்தேன் என்று கூறியிருந்தார். இதன்பின் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தற்போது கவர்ச்சிக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தன்னை டாப் நடிகர்கள் ஒதுக்க காரணம் என்ன என்று கூறிருக்கிறார். எத்தனை நடிககள் என்னை ரிஜெக்ட் செய்து இருக்கிறார்கள் தெரியுமா?. சின்னத்திரையில் நடிச்சிருக்காங்க, சினிமாவில் எப்படி ஹீரோயினா பண்ணுவாங்க என்று பல ஹீரோக்கள் பேசி இருக்கிறார்கள். கமிட்டாகி கையெத்து போடும் அளவிற்கு சென்றும் கடைசியில் டெலிவிஷன் ஆக்ரஸ்ன்னு வேண்டாம்னு சொல்லிவிடுவார்கள்.
அது என் மனதில் கஷ்டமாக இருக்கும். திறமைக்கான இடம் இல்லை என்றும் இதுக்கு முன் எங்கே இருந்தார்கள் என்ற விசயம் தான் பார்க்கப்படுவதாக வாணி போஜன் தெரிவித்துள்ளார். என்னை ஒதுக்கி நடிகர்களின் படத்தின் வாய்ப்பு வந்தும் நானே அவர்களை இப்போது ஒதுக்கி வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.