பார்க்கதான் முரட்டுதனமாக இருப்பார்.. ஆனா.. கணவர் நிக்கோலாய் பற்றி பேசிய வரலட்சுமி..
வரலட்சுமி நிக்கோலாய்
கல்யாணத்தை விதவிதமாக பல இடங்களில் நிறைய பெயர்களில் நடத்துகிறார்கள். ப்ரீ கல்யாணம், போஸ்ட் கல்யாணம் என கல்யாண கொண்டாட்டம் நடக்கிறது.
அப்படி இந்தியாவிலேயே மிகவும் பணக்கார குடும்பமான அம்பானியின் 2வது மகன் ஆனந்த் கல்யாணம் வருடம் ஆரம்பித்ததில் இருந்தே நடக்கிறது.
விதவிதமாக பெயர்கள் மாற்றி மாற்றி நடக்கிறது. அந்தவகையில் நடிகை வரலட்சுமியின் திருமணமும் கடந்த ஜூலை மாதம் தாய்லாந்தில் நடந்தது. திருமணத்திற்கு பின் வரலட்சுமி, நிக்கோல் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
தற்போது தன் கணவருடன் வெளிநாட்டுக்கு பறந்து ஹனிமூன் கொண்டாடி வருகிறார் வரலட்சுமி.
முரட்டுத்தனமாக இருப்பார்
சமீபத்தில் வரலட்சுமி அளித்த பேட்டியொன்றில், நிக்கோலாய் பார்க்கத்தான் முரட்டுத்தனமாக இருப்பார், ஆனால் குழந்தை மனம் படைத்தவர்.
அவருக்கு தமிழ் பேசவராவிட்டாலும் தமிழை புரிந்துகொள்வார். அவரை வைத்துக்கொண்டு தமிழில் அவரை பற்றி தவறாகவே பேச முடியாது.
ஏதாவது பேசினால் என்னைப்பற்றி என பேசுகிறீர்கள் என்று கேட்டுவிடுவார். அவருக்கு இப்போது நான் தமிழ் சொல்லிக் கொடுத்து வருகிறேன் என்று வரலட்சுமி அந்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.