குழந்தை பெத்துக்கொண்டது அவங்க தப்பு..நான் ஏன் உதவணும்? நடிகை வரலட்சுமி ஓபன் டாக்..

Sarathkumar Varalaxmi Sarathkumar Gossip Today Tamil Actress
By Edward Mar 12, 2026 12:45 PM GMT
Report

நடிகை வரலட்சுமி

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார், போடா போடி படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் தெலுங்கு, தமிழ் மொழிகளில் வில்லி ரோலிலும் நடிக்க ஆரம்பித்த வரலட்சுமி, எஸ் சரஸ்வதி என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தில் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

குழந்தை பெத்துக்கொண்டது அவங்க தப்பு..நான் ஏன் உதவணும்? நடிகை வரலட்சுமி ஓபன் டாக்.. | Varalaxmi Slams Indian People Have Kids

உடலுறவு குறித்து பேச

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நம் நாட்டில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள், ஆனால் உடலுறவு குறித்து பேச மறுக்கிறார்கள். அதுகுறித்து பேசினாலே ஐயோ கூடாது என்கிறார்கள். உலகிலேயே மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவில் உடலுறவு குறித்து பேச மறுப்பது எனக்கு அதிர்ச்சியாகவுள்ளது.

ஆனால் உடலுறவு வைத்துக்கொண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டே இருக்குகிறீர்கள். ஏதோ தொழிற்சாலைப்போல் குழந்தைகளை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதன்பின் குழந்தைகளை பெற்றுவிட்டோம், அதனால் கஷ்டப்படுகிறோம் என்று கூறுகிறார்கள். எதற்காக குழந்தை பெற்றுக் கொள்கிறீர்கள் என்று நான் கேட்கிறேன்.

முதலில் திட்டமிடுங்கள், உங்களிடத்தில் குழந்தையை பராமரிக்க போதுமான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பதை முடிவு செய்துவிட்டு அதன்பின் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளை பெற்றுவிட்டு அதன்பின் அவர்களை வளர்க்க திட்டமிடாதீர்கள்.

குழந்தை பெத்துக்கொண்டது அவங்க தப்பு..நான் ஏன் உதவணும்? நடிகை வரலட்சுமி ஓபன் டாக்.. | Varalaxmi Slams Indian People Have Kids

இன்று பொருளாதாரம் மாறிக்கொண்டே இருப்பதால் குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க பொருளாதார ரீதியாகவே மிகவும் சவாலானது. உங்களால் குழந்தைகளை பராமரிக்கக் கூடிய அளவிற்கு நிதி ஆதாரமில்லாமல் குழந்தைகளை பெற்றுவிட்டு, பணத்திற்காக மற்றவர்களிடம் போய் நிற்காதீர்கள்.

குழந்தை பெத்துக்கொண்டது அவங்க தப்பு

சிலர் என்னிடத்தில் வந்து குழந்தைகள் உள்ளது, எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். என்னை கேட்டால், அவர்கள் குழந்தை பெற்றார்கள், அவர்கள் செய்த தவறுக்கு நான் ஏன் உதவ வேண்டும்? என்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் கூட, திருமணம் செய்துக்கொள்ளுங்கள், ஆனால் பொருளாதார ரீதியாக நீங்கள் மிகவும் உறுதியான பின் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறேன்.

நீங்கள் குழந்தையை பெற்றுவிட்டு அதற்கு உதவி செய்யச்சொல்லி என்னிடம் வந்து நிற்காதீர்கள், நீங்கள்தான் உங்கள் குழந்தையை பார்க்க வேண்டும். சிலர் தாத்தா சாகறேன்னு சொன்னார், பாட்டி சாகறேன்னு சொன்னார்கள். அதனால் தான் குழந்தை பெற்றுக்கொண்டேன் என்று எல்லாம் கூறுகிறார்கள். அதற்காக நாம் நம் வாழ்க்கையை சீரழிக்க முடியாதுதானே. எமோஷனல் பிளாக்மெயில் இங்குள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்காக எல்லாவற்றிற்கும் நாம் தலையாட்டிக் கொண்டே இருக்கக்கூடாது என்று வரலட்சுமி பேசியுள்ளார்.