நாக சைதன்யா - சோபிதா திருமண வாழ்க்கைக்கு சந்தேகம் தான்!! பரபரப்பை ஏற்படுத்திய ஜோசியர்..
சில நாட்களாக தென்னிந்தியாவை தாண்டி வட இந்திய திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு என்றால் நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் நிச்சயத்தார்த்தம் தொடர்பான செய்திகள் தான். ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலை 9.42 மணிக்கு நிச்சயத்தார்த்தம் நடந்ததாக நாகர்ஜுனா தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்திருந்தார். பலரும் இதற்கு வாழ்த்து கூறியதை அடுத்து அவர்களின் கடந்த கால நிகழ்வுகளை நினைவுப்படுத்தி பேசி வருகிறார்கள்.
அப்படி நாக சைதன்யா 2017ல் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து 4 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்து 2021ல் பிரிந்தனர். நாக சைதன்யா தரப்பில் சமந்தாவுக்கு பல கோடியில் ஜீவனாவம்சமாக கொடுத்து அதை வாங்காமல் உதறினார் நடிகை சமந்தா.
இந்நிலையில் தெலுங்கு சினிமாத்துறையில் மிகவும் முக்கியமான நபராக பார்க்கப்படும் ஜோசியர் வேணு சுவாமி, தெலுங்கு மற்றும் ஆந்திரா பக்கம் பிரபலமான ஜோதிடராக திகழ்ந்து வருபவர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாளை நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் ஜாதங்களை ஆய்வு செய்து வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். தற்போது அந்த விஷயத்தை ஜோதிடர் வேணு சுவாமி அறிவித்துள்ளார்.
சமந்தாவின் ஜாதகத்தையும், சோபிதாவின் ஜாதகத்தையும் அலசினால், இரு ஜாதகங்களிலும் சனியின் கவனம் செவ்வாய். சோபிதாவின் ஜாதகத்தில் செவ்வாய் இப்போது கவனம் அல்ல, சுக்கிரன் மற்றும் வியாழன் மீதுதான் இருக்கிறது. 2027ல் சோபிதாவுக்கு நாக சைதன்யாவுக்கு சிக்கல் இருக்கும், நன்றாக இருப்பார்கள். ஆனால் பின் அவர்களின் திருமணம் நன்றாக இருக்குமா என்பது சந்தேகம்.
ஜாதகம் பொருந்தவில்லை என்பது மட்டுமில்லாமல் கொடுத்த நிச்சயதார்த்த நேரமும் சரியில்லை. நாக சைதன்யா, சமந்தாவுக்கு 100க்கு 50 மதிப்பென், நாக சைதன்யா - சோபிதாவுக்கு 10 மதிப்பெண் தருகிறேன். சோபிதாவுக்கு 10 கொடுத்தால் சமந்தா 100 சதவீதம் நன்றாக இருக்கிறது. ஆனால் தொழிலில் 20 சதவீதம் தான் நன்றாக இருக்கிறது.
மேலும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அகிலின் நிச்சயதார்த்தம் சமயத்தில் சொன்னதுபோல தான் நாக சைதன்யாவும் சோபிதாவும் சேர்ந்து இருக்க முடியாது. ஒரு பெண்ணால் பிரிந்து விடுவார்கள் என்று தான் காலம் சொல்கிறது என்று ஜோதிடம் வேணு சுவாமி தெரிவித்துள்ளார்.