காசுக்காக எதுவேணாலும் பண்ணலாமா.. நயன்தாரா - விக்னேஷ் சிவனை கண்டபடி திட்டிய உறவினர்..
நானும் ரவுடி தான் என்ற படத்தின் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா மீது காதலில் இருந்து வந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் நயன் தாராவை ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார் விக்னேஷ் சிவன். சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்ட திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் நெருக்கமான புகைப்படங்கள் என்று பதிவிட்டு வந்தனர்.

வாடகைத்தாய்
இந்நிலையில் 4 மாத திருமண வாழ்க்கையில் திடீரென வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றுள்ளோம் என்ற செய்தியை விக்னேஷ் சிவன் வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இந்த விசயம் பெரியளவில் வைரலாகியதோடு விதிமுறைப்படி விக்னேஷ் சிவன் - நயன் தாரா குழந்தை பெற்றுக்கொண்டனர் என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. இதுகுறித்து பலத்தரப்பினர் கருத்துக்களை கூறி வந்த நிலையில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா ஒருசில கருத்துக்களை கூறி பேட்டியளித்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் பெரியப்பா
அதில், என்னை திருமணத்திற்கு கூப்பிடவில்லை என்பதால் எனக்கு கோபம் இல்லை. ஆனால், அவர்கள் திருமணத்திற்கு பின் அநாகரீகமாக தனிப்பட்ட வாழ்க்கையை இணையத்தில் பகிர்ந்து வருவது பிடிக்கவில்லை. பீச்சில் அப்படியொரு போஸ் என்று கணவர் - மனைவிக்கு இடையில் இருக்கும் அந்தரகத்தை பகிர்வது நல்லது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

குழந்தை பெற்றுக்கொள்ளாமல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது பெரிய விதிகள் இருக்கிறது. அதேபோல் தத்தெடுத்து வளர்ப்பதிலும் பல விதிகள் இருக்கிறது. இது எனக்கு தெரிந்தவரையில் இது பெரிய குற்றம் தான். சினிமாவில் இருப்பவர்கள் எல்லாரும் வானலாவிய அறிவு இருப்பதாக நினைத்து கருத்துக்களை கூறி வருகிறார்கள். சில விசயங்கள் வரம்பிற்குள் தான் இருக்க வேண்டும். இவர்கள் பணத்தை பொறுத்து தான் இப்படியாக செய்து வருகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
குடும்பம் என்று வந்தால் சட்டப்படி எப்படி இருக்க வேண்டும் என்று தெரிய வேண்டும். அதன்படி செய்திருந்தால் அது தப்பு கிடையாது என்று ஆதங்கமாக கூறியிருக்கிறார் விக்னேச் சிவன் பெரியப்பா.