அப்பா, அம்மாவை கண்டுக்காத விஜய் மனைவியையும் ஏமாற்றினாரா.. 25 திருமண நாளையும் மறந்துவிட்டாரா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய். மாஸ் நடிகராக பல லட்ச ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அப்படியிருக்கும் விஜய் தன்னுடைய பெற்றோர்களை கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு சில ஆண்டுகளாக அவர்மீது இருந்து வருகிறது.
அதற்கேற்க விஜய் மக்கள் இயக்கம் சம்பந்தமான சில பிரச்சனையால் அம்மா, அப்பாவுக்கு எதிராக புகாரும் கொடுத்தார். அதன்பின் அப்பாவின் 81வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது எஸ் ஏ சி அவரது மனைவியுடன் மட்டுமே பிறந்தநாளுக்கு கேக் வெட்டி புகைப்படத்தை வெளியிட்டார்.

இதனால் விஜய்யை கடுமையாக இணையத்தில் விமர்சித்தனர். அவருக்கு வாழ்த்து கூறினாரா என்று கூட விஜய் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. அதேபோல் சில நாட்களுக்கு முன் விஜய்யின் தாயார் ஷோபா 73வது திருமண நாளை கொண்டாடினார். தந்தையுடன் சண்டை இருந்தாலும் அம்மாவிடம் பேசி வந்ததாகவும் கூறப்பட்டது.

அப்படியிருக்கையில் விஜய் அம்மாவுக்கு வாழ்த்து கூறினாரா இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 25 ஆம் தேதி விஜய் தன் மனைவி சங்கீதாவை கரம்பிடித்து 25 ஆண்டுகளாகியுள்ளது. 25 வது திருமண நாளை ரசிகர்கள் பங்கிற்கு வாழ்த்து கூறியும் சில அன்னதானச்செயல்களில் ஈடுபட்டும் வந்தனர்.

ஆனால் 25 வது திருமண நாளில் மனைவியுடம் நாட்களை கழித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சாதாரண 10 , 15வது திருமண நாள் என்றால் கூட பரவாயில்லை, 25 வது திருமண நாளை சாதாரண மக்களே கொண்டாடி விழாப்போல் நடத்துவார்கள்.
இதனை அவர் மனைவி சங்கீதாவும் எதிர்ப்பார்த்திபார் தான். இதனை கூட விஜய் செய்ய மறந்துவிட்டாரா என்ற கேள்விகளை இணையத்தில் நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள்.