ஜேசன் சஞ்சய்யின் 4 வருட போராட்டம்!! தந்தையாக விஜய் தோற்றுவிட்டார்!! பிரபலம்..
நடிகர் விஜய்யின் அரசியல் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை என பலரும் அவர் பற்றிய விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். விஜய்யுடன் பல ஆண்டுகள் பயணித்து அவருக்கு மேனேஜராக பணியாற்றிய பி.டி. செல்வகுமார் விஜய் குறித்து பேசியுள்ளார்.

பி.டி. செல்வகுமார்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ஜேசன் சஞ்சய், இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் வெளிநாட்டில் சினிமா தொடர்பான படிப்பை முடித்துவிட்டு லைகா நிறுவனம் தயாரிப்பில் சிக்மா என்ற படத்தை இயக்கி முடித்தார்.
ஆனாலும் இந்த படம் இன்னும் வரவில்லை, 4 வருடம் கடந்துவிட்டது. தன் மகனை நேரில் அழைத்து என்ன பிரச்சனை, என்ன உதவி வேண்டும் என்று விஜய் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.
இதேபோன்று அன்று எஸ் ஏ சந்திரசேகர் மட்டும் என் பிள்ளை தானாக வளரட்டும் என்று நினைத்து அமைதியாக இருந்திருந்தால், இப்போது விஜய் இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டிருக்க முடியுமா? ஒரு தந்தையாக விஜய் தோற்றுவிட்டார் என்று கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார் பி.டி. செல்வகுமார்.