மதுபோதையால் பறிபோன வாய்ப்பு! மாநாடு படத்தால் புலம்பும் தளபதி விஜய்
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் மாநாடு. பல ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கி வளரவிடாமல் பிரச்சனை செய்கிறார்கள் என்று மாநாடு படத்தில் ஆடியோ வெளியீட்டில் கண்ணீர் விட்டு அழுதார்.
தற்போது படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தில் சில ரகசியத்தை பிரபல யூடியூப் விமர்சகர்கள் பகிர்ந்து கொண்ட செய்து வெளியாகியுள்ளது. மாநாடு படத்தில் முதலில் விஜய் தான் நடிக்கவிருந்தாராம்.
2015ல் மாசு என்கிற மாசிலாமணி படம் வெளியான நேரத்தில் வெங்கட் பிரபு படக்குழுவினருக்கும் விஜய் அவர்கள் மலேசியா டீமுடன் மது பார்ட்டி வைத்துள்ளார். அப்போது அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலானது. இதனால் வெங்கட் பிரபு மீது கோபத்தில் இருந்துள்ளனர்.
இதற்கு முன் மாநாடு கதையில் நடிக்கவிருந்ததாக கூறி பின் அதிலிருந்து விஜய் விலகினார். ஆனால் இந்த காரணத்தை வெளியில் கூறாமல் இருந்துள்ளனர்.