மனைவி விவாகரத்து பிரச்சனை..ரூ.250 கோடி ஜீவனாம்சம்!! சங்கீதாவை தடுக்கும் விஜய் தரப்பினர்?
மனைவி விவாகரத்து பிரச்சனை
நடிகர் விஜய் சினிமாவை விட்டுவிட்டு தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு தவெக தலைவராக பல மாவட்டங்களுக்கு சென்று பரப்புரையாற்றி வருகிறார். இன்று தஞ்சாவூரில் தன்னுடைய பரப்புரையை நடத்தினார். இது ஒருபக்கம் இருக்க, என் கணவர் விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று கூறி அவரது மனைவி சங்கீதா. கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி விவாகரத்து மனுதாக்கல் செய்தார்.

ரூ. 250 கோடிகள்
இந்த சம்பவம் மிகப்பெரியளவில் பேசுபொருளானதை தொடர்ந்து, பலரும் சங்கீதாவை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்கள். அதிலும் தவெகவின் விஜய் ஆதரவாளர்கள் பலரும் சங்கீதாவை படுமோசமான பேசி வருவதாக கூறி, மாதர் சங்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய் தரப்பில் இருந்து சங்கீதாவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், சங்கீதா, மகன், மகள் என மூவருக்கும் ரூ. 250 கோடிகள் வழங்குவதாகவும் பேச்சுவார்த்தையில் பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.. இதில் சங்கீதா விவாகரத்து மனுவை திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளதாம்.

சங்கீதாவை தடுக்கும் விஜய்
இப்படியாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதற்கு சங்கீதா தரப்பில் என்ன பதிலளிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், பத்திரிக்கையாளர்களை சந்திக்க திட்டமிட்ட சங்கீதாவை, தவெக தலைவர் விஜய் தரப்புனர் தடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜீவனாம்ச தொகையை உயர்த்தி வழங்குவதாக சமரச பேச்சும் பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.