வலுக்கட்டாயமக விஜய் - சங்கீதாவை வெளியே அனுப்பினேன்!! எஸ் ஏ சந்திரசேகர் ஓபன் டாக்..
விஜய் - சங்கீதா
நடிகர் விஜய் மீது கடந்த பிப்ரவரி மாதம் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அரசியலில் நுழைந்த விஜய், தேர்தலை சந்திக்கும் நேரத்தில் சங்கீதா விவாகரத்து கேட்டு அடுக்கடுக்கான புகார்களை கொடுத்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதுகுறித்து பல தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர் இதுகுறித்து பேசியிருக்கிறார். விஜய்க்கு திருமணம் நடந்து முடிந்த உடனேயே அவர்களை தனி குடுத்தனம் வைத்துவிட்டேன்.
எனக்கு ஒரு மகள் ஒரு மகன், மகனை கடவுள் கேட்டதால் கொடுத்துவிட்டோம். அதன்பின் எனக்கு ஒரே பிள்ளைதான். நினைத்திருந்தால் அவரை எங்களுடன் வைத்திருப்பேன். ஆனால் நான் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினேன்.

ஏனென்றால் அவருக்கென்று தனித்துவம், சுதந்திரம் வேண்டும். நான் தனியாக வைத்ததால் நாம் ஜெயிக்கணும் என்று வருகிறார். அப்படி பிள்ளைகள் வரும்போது அதை பெற்றோர்கள் அழகு பார்க்க வேண்டும். என்னுடைய மகன் தனியாக இருக்கிறான் என்கிற கவலை எனக்கு இருந்திருக்கிறா? என்று கூறியிருக்கிறார்.