சங்கீதாவிடம் அடிக்கடி சொல்வேன்..மகன் கூட கத்துக்கிட்டு இருக்கான்!! நடிகர் விஜய் ஓபன் டான்
சங்கீதா - விஜய்
தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் மற்றும் திரைத்துறையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதை அடுத்து, சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்தது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் தன் கணவர் விஜய் இருப்பதாக கூறிய சில நாட்களில் நடிகர் விஜய், திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு ஒரே நிறத்தில் ஆடையணிந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில், விஜய்யின் பல செயல்பாடுகளை கருத்தில் கொண்டு சுமூகமாக பிரிந்துவிடலாம் என்று சங்கீதா கேட்க, ஆனால் விஜய் தான் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லையாம். அதனால் பொதுவெளிக்கு வந்துவிட்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
இதற்கிடையில் விஜய் - சங்கீதா குறித்த பழைய செய்திகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் அழகிய தமிழ் மகன் படத்தின்போது தனியார் சேனலுக்கு விஜய் பேட்டியளித்தார்.

பாடல்கள் பாடுவது ரொம்பவே பிடிக்கும்
அப்போது பேசியவர், எனக்கு பாடல்கள் பாடுவது ரொம்பவே பிடிக்கும். என் அம்மா, மாமா, அம்மம்மா என குடும்பமே நன்றாகத்தான் பாடுவார்கள். அதனால் எனக்கும் பாட ஆர்வம் வந்தது. ஆனால் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை. எனக்கு ரொம்ப பிடித்த விஷயமே பாடல் பாடுவதுதான்.
அது உண்மையில் ஒரு கிஃப்ட் தான். அதுதான் எனக்கு பிடிக்கும் என்று அடிக்கடி மனைவி சங்கீதாவிடம் சொல்வேன். என் மகன் ஜேசன் சஞ்சய் இப்போதுதான் கீ போர்ட் எல்லாம் கற்றுக்கொள்கிறான் என்று விஜய் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.