அது நீ பண்ண தப்புப்பா ! பையனிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்! இதுதான் காரணமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. பிட்சா, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சூதுகவ்வும் போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு மக்கள் செல்வன் என்ற பெயரை வாங்கி வருடத்திற்கு 5க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டு வருகிறார்.
கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட பல படங்களை தற்போது செப்டம்பர் மாதம் வெளியிட்டு வரும் விஜய் சேதுபதி லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. மேலும் சுமார் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி லாபம் படத்திற்காக இணையத்தளங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் வெண்ணைகளா என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது தன் மகனிடம் மன்னித்து விடு, உன் அப்பன் நிறைய காசு சம்பாதித்ததால் நீ இப்படி கெட்டு போறடா.
என் அப்பன் இப்படி சம்பாதிக்கலடா எப்போது வீடியோ கேம் விளையாட நானே கம்பியூட்டர் வாங்கி கொடுத்து உன்னை கெடுத்து விட்டேன் என்று கூறினேன் என் மகனிடம் என்று கூறினார். அதற்கு விஜய் சேதுபதி மகன், மாற்றிக்கொள்கிறேன், அது உன் தப்புப்பா என்று கேட்டான் என்று தெரிவித்துள்ளார்.