விஜய் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும்..வெளிப்படையாக கூறிய நடிகர் சசிகுமார்

Sasikumar Vijay
By Bhavya Sep 13, 2024 04:45 PM GMT
Bhavya

Bhavya

Report

நடிகர் சசிகுமார்

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என இரண்டு துறைகளிலும் ஜொலித்து கொண்டு இருப்பவர் சசிகுமார். இவர் நடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும் இயக்குனராக சுப்ரமணியபுரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது பிறகு சசிகுமார் அடுத்தடுத்து படங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.

விஜய் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும்..வெளிப்படையாக கூறிய நடிகர் சசிகுமார் | Vijay Should Act In Movies Says Sasikumar

இந்த நிலையில்,தற்போது, இவர் இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 20 - ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் மற்றும் சசிகுமார் பங்கேற்று வருகின்றனர்.அப்போது நேர்காணல் ஒன்றில் விஜய்யுடனான படம் குறித்து சசிகுமார் பேசியுள்ளார்.

விஜய் நடிக்க வேண்டும் 

அதில், ஈசன் படத்தை இயக்கிய பின் நான் தளபதி விஜய்யிடம் கதை கூறினேன். அந்த கதை ஒரு வரலாற்று சம்பந்தப்பட்ட கதை அதனை கேட்டு விஜய்யிக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அந்த நேரத்தில் பட்ஜெட், விஎப்எக்ஸ் எல்லாம் மிகவும் செலவுமிகுந்ததாக இருந்தது.

விஜய் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும்..வெளிப்படையாக கூறிய நடிகர் சசிகுமார் | Vijay Should Act In Movies Says Sasikumar

இதுபோன்ற காரணங்களுக்காக அந்தப் படம் கைவிடப்பட்டது. விஜய் அடுத்து ஒரு படம் நடித்து முடித்துவிட்டு அரசியலில் முழுவதுமாக களம் இறங்கக்கூடாது அவர் அரசியலில் இருந்து கொண்டும் அவ்வப்போது படம் நடிக்கலாம் என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.