விஜய்யை சுத்தமாக ஒதுக்கிறாரா ஜேசன் சஞ்சய்!! ஃபுல் பார்மில் இருக்கும் மகனின் அடுத்த மூவ்...
ஜேசன் சஞ்சய்
லண்டனில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, நடிப்பு படிப்பையும் முடித்து தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஜய் - சங்கீதாவின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா இயக்கத்தில் சிக்மா என்ற படத்தினை இயக்கி வருகிறார்.
தான் இயக்குநராக அறிமுகமாகிறேன் என்று ஜேசன் அறிவித்த நாள் முதல் இன்று வரை விஜய், மகனுக்கு வாழ்த்துக்களை வெளிப்படையாக கூறவில்லை என்ற விமர்சனம் எழுந்து வந்தது.

இதனையடுத்து, கணவர் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்து அதிர்ச்சி கொடுத்தார். விஜய்யை மகன் ஜேசனும் ஒதுக்கி வருவதாக தகவல் வெளியாகி வந்தது. இதனால் விஜய் மீது வருத்தத்தின் அளவு அதிகமாக இருக்கிறது என்று வெளிப்படையாக தெரிகிறது.
அடுத்த படம்
இந்நிலையில், கோலிவுட்டில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் கண்ணன் ரவியை சமீபத்தில் ஜேசன் சந்தித்திருக்கிறார்.

அநேகமாக அவரது தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்குவதற்காகத் தான் ஜேசன் சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து படங்கள் இயக்கும் வாய்ப்பை தனி ஆளாகவே ஜேசன் பெற ஆரம்பித்துவிட்டதால், இனிமேல் சுத்தமாக அவர் விஜய்யை கண்டுக்கொள்ள மாட்டாரோ என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.