என்னை புரிய வைத்தது திவ்யா தான்!! விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்..
முதல்வரும் நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிக்மா என்ற படத்தினை இயக்கியுள்ளார். ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்த நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக ஜேசன் சஞ்சய் பேட்டியளித்துள்ளார்.

அப்போது, தொகுப்பாளினி டிடி, தங்கை திவ்யா சாஷா பற்றி கேள்வி கேட்டுள்ளார். அதில், நான் ஸ்கூல் படிப்பை முடித்தப்பின் அங்கு காலெடியே எடுத்து வைக்கவில்லை, ஆனால் திவ்யாவின் பட்டமளிப்பு விழாவில் தான் மறுபடியும் ஸ்கூலுக்கு போனேன். ரெண்டு பேரில் அவள் தான் நல்லா படிப்பாள், சண்டை போட்டாலும் நான் தான் தப்பு.
திவ்யா ஒரு விஷயத்தில் இருந்தால் அதற்குதான் முக்கியத்துவம் கொடுப்பாள், யார் என்ன சொன்னாலும், அதை புரிய வைப்பாள். நாம் சிக்மா கதையை அவளிடம் தான் முதலில் சொன்னேன். ரொம்பவும் புத்திசாலி என்று தன் தங்கை திவ்யா சாஷாவை பெருமைப்படுத்தி கூறியிருக்கிறார் ஜேசன் சஞ்சய்.
என்னோட தங்கச்சியை ரொம்ப Miss பண்றன் - சஞ்சய் pic.twitter.com/LMv0mMaPcr
— rossy (@rossy1478178) August 1, 2026