விஜய் - திரிஷா விவகாரம்!! நயினார் சேர்ந்திருப்பது அசிங்கக் கூடாராம்!! பிரபலம் காட்டம்...
விஜய் - திரிஷா
நடிகர் விஜய் குறித்து அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட வாழ்க்கை ரீதியாகவும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடிகை திரிஷாவுக்கும் விஜய்க்கும் இடையிலான நட்பு குறித்த கிசுகிசுக்கள் கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட்டில் வலம் வந்த வண்ணம் இருக்கிறது.

இப்படியிருக்கையில் பாஜக தமிழ்நாடு மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பிப்ரவரி 13ல் செய்தியாளர்கள் சந்திப்பில், விஜய் முதலில் திரிஷாவிடம் இருந்து வெளியே வரவேண்டும் என்று காட்டமாக பேசியிருந்தார்.
அவர் பேசியதற்கு பலத்தரப்பினர் நயினாரை விமர்சித்து வருகிறார்கள். தற்போது இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் காட்டமாக ஒரு கருத்தினை கூறியிருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தன்
அதில், நயினார் பண்பானவர்தான், ஆனால் அவர் சேர்ந்திருப்பது அசிங்கக்கூடாரம். பன்றியோடு கன்று சேரும்போது, பன்றி வைக்கோல் தின்ன கற்பதில்லை. கன்று தான் அதைத்தின்னும்.

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது ஏற்புடையதல்ல. பிரம்மச்சாரி என்று காட்டிக்கொள்கிற மோடி அடிக்காத கொட்டமா? உங்களுக்கே தெரியும், மன்னிப்பு கேட்டுவிடுங்கள் என்று விஜய் - திரிஷாவை பேசிய நயினாருக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.