மேடையில் உளறிய மகாராஜா இயக்குனர்!! டேய் என பதறியடித்து விஜய் சேதுபதி செய்த செயல்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி டோலிவுட், பாலிவுட் வரை சென்று தன் திறமை காட்டி வருகிறார். இதுவரை பல படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி தன்னுடைய 50வது படமான மகாராஜா படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி மக்களிடம் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் குரங்கு பொம்மை படத்திற்கு பின் இப்படத்தினை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் காட்சி திரையிடப்பட்டு அவர்களை சந்தித்து இயக்குனரும் விஜய் சேதியும் பேசியிருந்தனர். அப்போது பலர் பாராட்டி பேசிய நிலையில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனிடம், மகாராஜா என்ற இப்படியொரு பெயரை எப்படி வைத்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நித்திலன், பெயர் வைப்பதில் ஒரு முரண்பாடு இருந்தால் தான் அதில் சுவாரஸ்யம் இருக்கும்.
பார்பர் மகாராஜா கேட்கும் போது எப்படி இருக்கிறது. பார்பர் என்று கூறி இடைவெளிவிட்டு மகாராஜா என்று கூறியிருக்கிறார். அப்படி இயக்குனர் சொன்னதும் பத்திரிக்கையாளர்கள் ஜாதியை பேசுறீங்களா என்று கேட்டிருக்கிறார். இதை கேட்டு பதறிய விஜய் சேதுபதி டேய் என்று கூறி குறுக்கிட்டு, திருடனுக்கு போலிஸ்னு பெயர் வைத்தால் அதில் ஒரு ஃபன் இருக்கும்.
அதை கேட்கும் போது எனக்கே ஷாக்காக இருந்தது. அதுபோல தான் இதுவும் என்று கூறினார். மேலும் நான் இடையில் பேசி அவனை காப்பாற்றவில்லை. அவனுக்கு இன்னும் பழக்கம் இல்லை, அவன் இன்னும் அப்பாவி தான். எதுவும் தெரியாது, இன்னும் ரெண்டு படம் கழிச்சி நல்லா பேசுவான். நானும் ஆரம்பத்தில் இப்படி தான் பயந்து இருந்தேன், பழகுறது தான் வேற என்ன என்று விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.