கெஸ்ட்-னு வந்துட்டு அங்க கை போடுவாங்க!! கோபத்தில் வெறுப்பாகி பேசிய விஜே ஜாக்குலின்..
விஜய் டிவி-யில் தொகுப்பாளினியாக பணியாற்றி தன்னுடைய வித்தியாசமான குரலால் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் விஜே ஜாக்குலின். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்குலின், நயன் தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.
அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வரும் ஜாக்குலின் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல விசயங்களை கூறியிருக்கிறார்.
அந்தவகையில், பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். என்னோடு காதல் கிசுகிசுவில் ரக்ஷனோடு பேசும் போது அதற்கான பதிலை நான் கொடுத்திருக்க மாட்டேன். ஏனென்றால், ஒரு விசயம் நடக்கவே இல்லை, அப்போ எதுக்கு பதில் சொல்லணும் என்று தோன்றும்.
தர்ஷன் எனக்கு நல்ல ஃபிரெண்ட், அவர் குடும்பமும் அவரது மனைவியும் நல்ல ஃபிரெண்ட் என்று கூறியிருக்கிறார். மேலும் விஜய் டிவி பிரபலத்துடன் எனக்கு கிரஷ் ஏற்பட்டிருக்கிறது என்றும் ஒரு பிரபலத்திடம் இருந்து எனக்கு பிரபோஷல் வந்திருக்கிறது.
எனக்கும் ரக்ஷனுக்கு சண்டை வந்திருக்கு, ஷோவிற்கு Intro சொல்லும் போது இருருக்கும் சண்டை வரும், அவன் சிலவற்றை ஏற்றுக்கொள்ளவே மாட்டான் என்றும் தெரிவித்திருக்கிறது. கெஸ்ட்-னு சொல்லிட்டு வருவாங்க, ஆங்கர் என்பவர்களை என்ன வேணாலும் பண்ணலாம் என்று நினைப்பார்கள்.
அப்படி ஒருசிலர் தோல்மீது கை போடுவார்கள். அப்போது ரொம்பவே கோபம் வரும் அடிக்கும் போல் இருக்கும். உங்களை தூக்கவா என்று கேட்டால் என்ன, நான்லா அதை என்னிடம் செய்தால் அடித்துவிடுவேன் என்று ஓப்பனாக கூறியிருக்கிறார்.