என் புருஷன் பண்ண துரோகம்.. அந்த மாதிரி போட்டோஷூட்-க்கு காரணமே!! ஓப்பனாக பேசிய விஜே மகேஸ்வரி..

Bigg Boss Vj Maheswari Tamil Actress Actress
By Edward Feb 08, 2024 03:30 PM GMT
Report

சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே மகேஸ்வரி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 -ல் கலந்து கொண்டார். அங்கு அவர் மனதில் பட்டதை தைரியமாக பேசி சண்டையும் போட்டு கொண்டார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் நெட்டிசன்கள் இவரை மோசமாக விமர்சனம் செய்தனர்.

என் புருஷன் பண்ண துரோகம்.. அந்த மாதிரி போட்டோஷூட்-க்கு காரணமே!! ஓப்பனாக பேசிய விஜே மகேஸ்வரி.. | Vj Maheshwari Open Glamour Photoshoot Husband

ஆனால் அதை பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை பார்த்து வருகிறார். மகேஸ்வரி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். விஜே மகேஸ்வரிக்கு விவாகரத்தாகி ஒரு மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தன் கணவர் குறித்தும், கிளாமர் போட்டோஷூட் போட என்ன காரணம் என்பதை பற்றியும் ஓப்பனாக பேசியிருக்கிறார். மறக்க முடியாத துரோகம் என்று கேட்டால் நிறைய துரோகங்களை நான் அனுபவித்திருக்கிறேன். நண்பர்கள், உறவினர்கள், முக்கியமாக என் புருஷன் எனக்கு செய்த துரோகம்.

என் புருஷன் பண்ண துரோகம்.. அந்த மாதிரி போட்டோஷூட்-க்கு காரணமே!! ஓப்பனாக பேசிய விஜே மகேஸ்வரி.. | Vj Maheshwari Open Glamour Photoshoot Husband

இதையெல்லாம் நான் நினைத்து புலம்பப்போவதில்லை என்றும் இதிலிருந்து நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு, இதை மற்றவர்களுக்கு கனவில் கூட செய்யக்கூடாது என்றும் எதிரிக்கு கூட இது நடக்கக்கூடாது என்றும் அதற்கு எந்நேரத்திலும் நான் காரணமாக இருந்துவிடக்கூடாது என்று நான் கவனமாக இருப்பதாக மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

மேலும், கிளாமர் போட்டோஷூட் போடுவதற்கு காரணம் ஏதாவது இருக்கிறதா என்று ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு விஜே மகேஸ்வரி, அதற்கு காரணம்லாம் ஒன்றுமில்லை. எனக்கு சின்ன வயதில் இருந்து ஆடைகள் அணிவது பிடிக்கும், நல்ல ஆடையணியவும் பிடிக்கும். நயன்தாராவை ரொம்ப பிடிக்கும்.

புன்னகை அரசி சினேகா நடிகை மட்டும் இல்லை.... இனி அதுவும் தான்

புன்னகை அரசி சினேகா நடிகை மட்டும் இல்லை.... இனி அதுவும் தான்

அவரைப் போல் இப்படி ஆடையணிந்து அழகாக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை. ஒரு கட்டத்தில் என் மகனை நன்றாக நான் பார்த்துக்கொள்கிறேன். சரியான முறையில் என் வாழ்க்கை செல்வதால் எனக்கு பிடித்ததை செய்யவே விரும்புவதாகவும் தப்பான விசயங்களை நான் செய்யவில்லை என்று விஜே மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.