திருமணமாகி 6 வருஷத்துக்கு பின் வெட்கப்பட்ட விஜே பிரியங்கா.. ஒரு வேல அப்படி இருக்குமோ!!
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி மாகாபா ஆனந்த் மூலன் விஜய் தொலைக்காட்சி பணியினை ஆரம்பித்து பிரபலமானவர் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே.
கலக்கபோவது யாரு 5 சீசனில் நடுவராக ஆரம்பித்த விஜய் தொலைக்காட்சி சேனலில் விஜே பணி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அதன்பின் தொடர்ந்து அனைத்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் காமெடியாக தங்கள் பாணியில் தொகுத்து வழங்கி சூப்பராக நிகழ்ச்சியை எடுத்து சென்று வந்தனர்.

பின் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சி உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு சேனலில் பணியாற்றிய பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவர் புராணம் பாடி வந்த பிரியங்கா சில மாதங்களாக கணவரை விட்டு பிரிந்துவிட்டார் என்ற செய்தி வைரலானது.

இதன்பின், கடந்த ஆண்டு பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டு முதல் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். இடையில் வெளிநாடு சுற்றுலா என்று ஜாலியாக இருந்த பிரியங்கா கணவரை கண்டுகொள்ளாமல் அம்மா தம்பியுடன் வசிந்து வந்தார். விவாகரத்து ஆகிவிட்டதா என்ற கேள்விகளுக்கு கூட பிரியங்கா பதிலளிக்காமல் மெளனமாக இருந்து வருகிறார்.
தற்போது என் உலகம் என் அம்மா, தம்பி தான் என்று கூறி சமீபத்தில் புகைப்படத்தையும் வெளியிட்டார். தற்போது கல்யாணத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து வெட்கப்பட்டு எடுத்த புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார். முகத்தில் ஒரு பொலிவு தெரிகிறதே பிரியூ என்று ரசிகர்கள் கிண்டலடித்தும் வருகிறார்கள்.