நான் உளறுவாயன்..கருணாநிதி, ஜெயலலிதா கூப்பிட்டும் அரசியலுக்கு போகாத பாரதிராஜா..
பாரதிராஜா
தமிழ் சினிமாவில் ஆகப்பெரும் படைப்பாளியாக திகழ்ந்த பாரதிராஜா ஜூன் 10 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இழப்பை திரையுலத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 6 தேசிய விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகளுக்கு சொந்தக்காரரான பாரதிராஜா அரசியலில் தடம் பதிக்க மறுத்தார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் அரசியல்வாதியாக பாரதிராஜா நடித்தார். நிஜத்தில் அரசியலில் எண்ட்ரி கொடுக்காத காரணம் குறித்து பேசியிருக்கிறார்.
அரசியலுக்கு போகாத
அதில், ரோஜா என்னிடம் முதன்முறை அறிமுகம் செய்யப்பட்டபோது, எனக்கு அவர் ரோஜாப்பூ மாலை அணிவித்தார். அதனால் ரோஜா என அவருக்கு பெயர் வைத்தேன். நான் உளறுவாயன் என்பதால் அரசியலுக்கு போகவில்லை.

எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் என்னை அரசியலுக்கு வரச்சொன்னார்கள். செத்தாலும் திரைக் கலைஞனாக சாக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என ஜெயலலிதாவிடம் கூறினேன் என்று பாரதிராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.