32 வயதில் திருமணம் செய்யாமல் இருக்க இதுதான் காரணம்!! நடிகை ஓவியா ஓப்பன் டாக்..
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி 2009ல் நாளை நமதே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் நடிகை ஓவியா. இப்படத்தினை தொடர்ந்து களவாணி படத்தில் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்ற ஓவியா, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடன் கூடம், புலிவால், 144, யாமிருக்க பயமே போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.
இடையில் வாய்ப்பில்லாமல் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சிக்கு பின் 90 எம் எல், முனி 4, ஓவியாவை விட்டா யாரு, களவாணி 2, பிளாக் காஃபி போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது ராஜா பீமா, சம்பவம், பூமர் அங்கிள் போன்ற் படங்களில் நடித்தும் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வரும் ஓவியா, விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் கசிந்தது. சமீபத்தில் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகை ஓவியா, நான் இப்போது சிங்கிள் தான்.
மகிழ்ச்சியாக இருக்க இன்னொருவர் தேவை என்று நினைக்கவில்லை என்றும் திருமனம் என்பதற்கான நேரம் அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதனால் நாம் அதன்பின் போகாமல் அது வந்தால் ஓகே, இல்லை என்றாலும் நான் மகிழ்ச்சியாக தான் இருப்பேன். யாருடமிருந்தும் எதையும் எதிர்ப்பார்க்கவில்லை என்பதால் நான் தனியாக இருக்க விருப்புகிறேன் என்று ஓப்பனாக பதிலளித்திருக்கிறார்.