ஓவர் தெனாவட்டு.. அசிங்கப்படுத்திய விஜய்யை இனிமே சந்திக்கவே கூடாதுன்னு முடிவெடுத்த நடிகர்..
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராகவும் டப்பிங் யூனியன் தலைவருமாகவும் திகழ்ந்து வரும் நடிகர் ராதா ரவி 70 வயதுக்கு மேல் ஆகியும் படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக பொதுமேடைகளில் வெளிப்படையாக பேசி சர்ச்சையிலும் சிக்கி வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் பற்றி ஒரு மேடையில் பேசியிருக்கிறார். விஜய்யின் தீவிர ரசிகனாக என் பேரன் இருந்தான். அவன் குழந்தையா இருக்கும் போது விஜய்யோடு போட்டோ எடுக்க வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டான்.
அவனுக்கு 11 வயதானதும் நான் விஜய்யுடன் சர்க்கார் படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது விஜய்யுடன் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று சர்ச்சார் ஷூட்டிங்கிற்கு என் பேரனை கூட்டிச்சென்றேன், கூடவே என் குடும்பத்தினர் வந்திருந்தார்கள். உங்களிடம் போட்டோ எடுக்க என் குடும்பம் வந்திருக்காங்க என்று விஜய்யிடம் கூற அவரும் ஓகே சொல்லிட்டாரு.
ஆனால் அவரோட பி. ஏ எங்களை உள்ளயே விடவில்லை. மேக்கப் போட்டிருக்காரு அதனால் இப்போ வேண்டாம் முடியாது என்றும் கொஞ்சம் நேரம் ஆகும் வெயிட் பண்ணுங்க என்றும் கூறினார். ஆனால் என் குடும்பம் ரொம்ப நேரம் காத்திருந்தாங்க. அதன்பின் மேக்கப் எல்லாம் ரிமூவ் செய்து விஜய் வந்து என் குடும்பத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டார். பின் சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் நான் மயங்கிய போது விஜய் என்னை தாங்கி பிடித்து உதவினார்.
அதற்கு நன்றி தெரிவிக்க அதன்பின் நேரில் சந்திக்க வேண்டும் என்று பி. ஏவிற்கு கால் செய்தேன். அப்போது மீட் பண்ணனும் என்றால் நீங்க தாராளமாக பார்க்கலாம், முன்பு கூட்டிட்டு வந்தமாதிரி குடும்பத்தோடு வந்துடாதீங்க என்று சொன்னதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. நான் வரவில்லை என்று கூறி போனை கட் பண்னிவிட்டேன், அதன்பின் விஜய்யை சந்திக்கவே இல்லை என்று ராதாரவி மேடையில் கூறியிருக்கிறார்.