சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி.. பல கோடி அள்ளி கொடுத்த BCCI!
                                    
                    Cricket
                
                                                
                    India
                
                        
        
            
                
                By Bhavya
            
            
                
                
            
        
    கிரிக்கெட்
13வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்ற நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு நுழைந்தன. 45.3 ஓவர்களில் 246 ரன்களை எடுத்த தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதனால் இந்தியா சாம்பியன்ஸ் பட்டம் வென்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி வெல்லும் முதல் உலகக்கோப்பை இதுவே ஆகும். ரசிகர்கள் நேற்று இரவில் இருந்து இதனை கொண்டாடி வருகிறார்கள்.

அள்ளி கொடுத்த BCCI!
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவாஜித் சைகியா, ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.51 கோடி ரொக்கப் பரிசை அறிவித்துள்ளனர்.
