யாரும்மா பின்னாடி அம்மா அப்பா-வா? யாஷிகாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..
மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு படத்தில் அறிமுகமாகிய யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
சில படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகிய நிலையில் கடந்த ஆண்டு கார் விபத்தில் படுத்த படுக்கையாகினார். 4 மாதங்கள் சிகிச்சை பெற்றப்பின் உடல் நிலை சரியானபின் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் நிரூப், பாலாஜி முருகதாஸ், உமாபதி ராமையா போன்றவர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.
சமீபத்தில் கூட நிரூப்பை பார்க்க பிக்பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தார். இதையடுத்து அந்த கிசுகிசு முடியும் தருணத்தில் யாஷிகா ஏப்ரல் ஃபூல் சொல்வதற்காக ஒருவரை காதலிப்பதாக கூறி வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.
தற்போது அடக்கடவுளே இது என் அப்பா அம்மாவா? என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டி சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.