இந்த இடத்தையும் விடலையா? கம்பல் போடும் வீடியோவை வெளியிட்ட யாஷிகா
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய மாடல் நடிகை யாஷிகா ஆனந்த். இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதை ஈர்த்து வந்தார். இந்நிகழ்ச்சி மூலம் ஒருசில படங்களில் நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு தோழி கொடுத்த பார்ட்டி முடித்துவிட்டு வீடு திரும்பும் போது கார் விபத்தாகி சம்பவ இடத்திலேயே தோழி பவானி உயிரிழந்தார். படுகாயமடைந்த யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டார்.
பட இடங்களில் படுகாயங்கள் இருந்ததால் யாஷிகாவால் எழுந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் 4 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் உடல் தகுதியில் சீராகி பழைய நிலைக்கு வந்துவிட்டார்.
ஒருசில விஷயங்கள் மட்டும் செய்ய முடியாமல் படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா. தன்னுடைய பழைய ஸ்டைலை கொண்டு போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது காதிற்கு முன் இருக்கும் சதை பகுதியில் கம்பல் குத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இங்கெல்லாமா குத்துவாங்க என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.