மரணத்திற்கு முன் நடிகை யாஷிகாவுடன் இருந்த கடைசி நேரம்! தோழி பவானி எடுத்துக்கொண்ட புகைப்படம் இதுதானாம்..
Accident
Biggboss
Yashika
Tamilactress
Bavani
By Edward
தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். சில மாதங்களுக்கு முன் நண்பர்களுடன் பாண்டிச்சேரியில் பார்ட்டி முடித்து விட்டு வீடு திரும்பும் போது மகாபலிபுரம் அருகே கார் விபத்துக்குள்ளாகி அவரது தோழி பவானி சம்பவம் இடத்திலேயே மரணமடைந்தார்.
யாஷிகாவிற்கும் அவரது நண்பர்களுக்கும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கை, கால், முதுகு முறிவுக்குப்பின் தற்போது சரியாகி இருந்தாலும் சில நாட்கள் நடக்க முடியாது என்று கூறி வந்தார் யாஷிகா. சமீபத்தில் அவர் சிகிக்சை பெற்ற புகைப்படத்தையும் வெளியிட்டார் யாஷிகா.
தற்போது அவரது தோழி பவானி இறப்பை தாங்க முடியாமல் இருந்து வருகிறார். அவருடன் கடைசியாக எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு மனமுருகி பதிவிட்டுள்ளார்.