மைக் Off பண்ணிட்டு வெளியே வா!! மேடையில் கோபப்பட்ட யோகி பாபு...
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் யோகி பாபு தற்போது ஒரு வருடத்திற்கு 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த வருடத்தில் மட்டும் அயலான், சைரன், ரோமியோ, ரத்தம், அரணமனை 4, ஹரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வெளியாகியிருக்கிறது. மேலும் லீட் ரோலில் நடித்துள்ள படங்களும் தற்போது உருவாகி வருகிறது. சமீபத்தில் போட், கங்குவா, கோட், அந்தகன், கஜானா உள்ளிட்ட படங்களும் உருவாகி வருகிறது.
சமீபத்தில், சிம்பு தேவன் இயக்கத்தில் போட் படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நேற்று ஜூலை 27ல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாலை 6 மணிக்கு ஆரம்பிப்பதாக கூறி பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்ச்சிக்கு யோகி பாபு வேறொரு ஷூட்டிங்கை முடித்துவிட்டு தாமதமாக வந்திருந்தார்.
இதுகுறித்து நிகழ்ச்சியில் படக்குழுவினர் தெரிவித்த நிலையில், அதன்பின் யோகி பாபு பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு மேடையில் பேசினார். ஏன் வரவில்லை என்று விளக்கம் கொடுத்தப்பின் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருக்கிறார் யோகி பாபு. அப்படி யோகி பாபு கேட்டும் பத்திரிக்கையாளர்கள் விடாமல் கேள்விகளை கேட்டு யோகி பாபுவை கோபப்பட வைத்திருக்கிறார்.
பின், எனக்கு டைமிங் சொல்லவில்லை, என் சூழ்நிலையை சொல்லிவிட்டேன். எல்லா சிக்னலிலும் நின்று வருகிறேன், காரில் தானே வருகிறேன். அதான் எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டேனே? அதன்பின் ஏன்? என்று கூறிவிட்டார். நடிகர் சங்கம் தலைவராக நீங்கள் ஆவீர்கள் என்ற தகவல் வருகிறதே என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்க, மைக்கை ஆஃப் பண்ணிட்டு வெளியே வா என்று சொடக்கு போட்டு பேசியிருக்கிறார்.
