ஸ்ரீதேவி மரணம் குறித்து வெளிவந்த ஆவணங்கள்.. போலீஸ் விசாரணையில் சிக்கிய பிரபலம்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீ தேவி. இவர் கடந்த 2018 -ம் ஆண்டு துபாயில் அவரது ஹோட்டல் அறையில் பாத்டப்பில் மூழ்கி மரணம்.
இவருடைய மரணம் குறித்து பல சந்தேகங்கள் எழுந்தது. அது தொடர்பாக இப்போது வரை பல வதந்திகள் வந்துகொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் தீப்தி என்ற பிரபல யூடியூபர் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் இந்திய அரசும் துபாய் அரசும் சில விஷயங்களை மூடி மறைப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
அதுமட்டுமின்றி தீப்தி ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக கடிதங்களை காட்டி இருக்கிறார். இதனை அடுத்து இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடித்தி வந்தார்கள். அப்போது தீப்தி காட்டிய ஆவணங்கள் எல்லாமே போலி என தெரியவந்து இருக்கிறது. போலி ஆவணங்களை காட்டி இப்படி செய்ததற்கு தீப்தி விரைவில் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.